புதிய புத்தகம்

ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன நான் நல்லதொரு புத்தகம் வாங்கி. பெங்களூரில் இருப்பதும் ஒரு காரணம். நேற்றுதான் திரும்பவும் புத்தகத்தை தேடி பெங்களூர் லாண்ட்மார்க்ல் அலைந்‌தேன். தற்பொழுது திரு. ஃபிரெட்ஹெம் ஹார்டி எழுதிய "விரக பக்தி" என்ற புத்தகம் எனது நூலகத்தில் இடம் பிடித்திருக்கிறது.
என் இங்கிலாந்‌து பயணத்தில் ஏற்ப்பட்ட ஒரு முக்கியமான, மறக்கமுடியாத நிகழ்ச்சி நான் ஃபிரெட்ஹெம் ஹார்டியை சந்‌தித்ததுதான். அவர் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.
அவர் வீட்டிற்கு சென்றபொழுது "வாங்கோ" என்றார், சுத்த தமிழில் (இது பற்றி விரிவாக எனது இங்கிலாந்‌து பயணத்தொடரில் எழுதுவேன்).

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்