வலைப்பதிவுகளும் நானும்

இன்று காலை எனது வலைப்பதிவை பார்க்கும் போது ஒரே ஆச்சரியம், நான் எழுதிய பதிவிற்குப் பாராட்டுக்கள்.
உண்மையில் எனது வீட்டிற்க்கு கடிதத்தைத் தவிற வேறு எதையும் நான் எழுதியது கிடையாது (கடிதமும் கல்லூரி நாட்களில் எழுதியது, இப்பொழுது தான் தொலைபேசி இருக்கிறதே).
எதையாவது எழுதுவது என்றாலே எனக்கு உதரலெடுக்க ஆரம்பித்துவிடும், எனது நன்பர்கள் என்னிடமிருந்து எதிர்பார்க்கும் கடைசிப் பொருள் எனது மடலாகத்தானிருக்கும். எனது வலைப்பதிவுகள் பற்றி அவர்களிடத்தில் இன்னமும் சொல்ல வில்லை, சொன்னால் என்ன நடக்கும் என்று தெரியாது.
இந்த விமரிசங்களைப் பார்க்கும் பொழுது, எனக்கு மேலும் எழுத வேண்டும் எனத்தோன்றுகிறது. மனக்குரங்கு(வேதாளத்தை கொஞ்சம் தூங்க விடுகிறேன்) மீண்டும் மரத்தில் ஏறுவதற்கு முன்பு இதைப்பதித்து விடுகிறேன்.
நன்பர்கள் 'காசி'க்கும் 'பரி'க்கும் நன்றி.

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்